search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விலை குறைவு"

    • கடந்த 2 வாரங்களுக்கு ஒரு கிலோ முட்டைக்கோஸ் ரூ.30-க்கு விற்பனையானது.
    • விலை வீழ்ச்சி காரணமாக விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் நிலை ஏற்பட்டு உள்ளது என்றார்.

    கோத்தகிரி,

    கோத்தகிரியில் முட்டைக்கோஸ் கொள்முதல் விலை குறைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், மேரக்காய், நூல்கோல், பீன்ஸ், காலிபிளவர் உள்ளிட்ட மலைக்காய்கறிகள் மற்றும் இங்கிலீஷ் காய்கறிகள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அறுவடை செய்யப்படும் காய்கறிகள் உள்ளூர் மற்றும் மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளுக்கு சரக்கு வாகனங்கள் மூலம் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது. கோத்தகிரி அருகே ஈளாடா, கதவுத்தொரை, கட்டபெட்டு, குடுமனை, நெடுகுளா உள்ளிட்ட பகுதிகளில் முட்டைகோஸ் அதிகளவில் பயிரிடப்பட்டது. கடந்த 2 வாரங்களாக கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் விளைநிலங்களில் அறுவடைக்கு தயாரான நிலையில் முட்டைக்கோஸ் அழுகி வீணாகும் நிலை ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் முன்கூட்டியே முட்டைக்கோஸ் அறுவடை செய்து வருகின்றனர். தற்போது முட்டைகோஸ் கிலோவுக்கு ரூ.15 முதல் ரூ.20 வரை மட்டுமே விலை கிடைத்து வருகிறது. கடந்த 2 வாரங்களுக்கு ஒரு கிலோ முட்டைக்கோஸ் ரூ.30-க்கு விற்பனையானது. இதற்கிடையே கொள்முதல் விலை குறைந்து உள்ளதால், விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர். இதுகுறித்து கட்டபெட்டு பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில், சமீபகாலமாக விதை, உரம் மற்றும் இடுபொருட்கள் விலையேற்றம், தொழிலாளர்கள் பற்றாக்குறை, வனவிலங்குகள் தொல்லை போன்றவற்றை எதிர்கொண்டு வருகிறோம். மேலும் வங்கிக் கடன் பெற்று விவசாயம் செய்து வருகிறோம். முட்டைக்கோஸ் கிலோவுக்கு ரூ.20-க்கு மேல் கொள்முதல் விலை கிடைத்தால் மட்டுமே விவசாயிகளுக்கு கட்டுப்படியாக வாய்ப்பு உள்ளது. ஆனால், விலை வீழ்ச்சி காரணமாக விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் நிலை ஏற்பட்டு உள்ளது என்றார்.

    • மழையால் செடிகள் மட்டுமின்றி, காய் மற்றும் பழங்கள் அழுகியுள்ளதோடு பறிக்க முடியாமலும் வீணாகி வருகிறது.
    • மழைக்கு தாங்காது என்பதால், வெளி மாவட்ட விவசாயிகள் உடுமலையிலிருந்து தக்காளி கொள்முதல் செய்ய தயக்கம் காட்டுகின்றனர்.

    உடுமலை:

    உடுமலை பகுதிகளில் தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது. கொடி மற்றும் செடி முறையில், ஏறத்தாழ 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதிகளில் விளையும் தக்காளி, கேரள மாநிலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்குச்செல்கிறது.

    வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால், இதனை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கடுமையாக பாதித்துள்ளனர். மழையால் செடிகள் மட்டுமின்றி, காய் மற்றும் பழங்கள் அழுகியுள்ளதோடு பறிக்க முடியாமலும் வீணாகி வருகிறது.

    மழையில் பறிக்கும் தக்காளி சந்தைக்கு வருவதற்குள் அதிக அளவு அழுகி விடுகிறது. இதனால் அதன் மகசூல் பெருமளவு பாதித்துள்ளது. இதையடுத்து சாகுபடி செய்த விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.செடிகளிலிருந்து பறிக்கும் தக்காளிகளை உடுமலை பகுதிகளிலுள்ள ரோட்டோரங்களிலும் சந்தை வளாகத்திலும் வீசிச்செல்லும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.

    இப்பகுதிகளில் விளையும் தக்காளி உடுமலை நகராட்சி சந்தை மற்றும் தனியார் விற்பனை மையங்களுக்கு கொண்டு சென்று ஏல முறையில் விற்பனை செய்யப்படுகிறது.மகசூல் சரிந்து, விற்பனைக்கு வரும் தக்காளி வரத்து பெருமளவு குறைந்தாலும் அது விலை சரிவை சந்தித்துள்ளதால் விவசாயிகள் பாதித்துள்ளனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன் 14 கிலோ கொண்ட பெட்டி 700 ரூபாய் வரை விற்றது. தற்போது கொடி தக்காளி ஒரு பெட்டி 160 ரூபாய் வரையும், செடி தக்காளி 100 முதல், 120 ரூபாய் வரை மட்டுமே விற்று வருகிறது.மழைக்கு தாங்காது என்பதால், வெளி மாவட்ட விவசாயிகள் உடுமலையிலிருந்து தக்காளி கொள்முதல் செய்ய தயக்கம் காட்டுகின்றனர்.

    • நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன.
    • இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 3½ கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    நாமக்கல்:

    தேசிய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் முட்டை தொழிலுக்கு பெயர் பெற்று திகழ்கிறது நாமக்கல். இங்கிருந்து வெளி மாநிலங்களுக்கும், நாடுகளுக்கும் முட்டை விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன.நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 4½ கோடிக்கும் மேற்பட்ட முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 3½ கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயிக்கும் விலைக்கு பணியாளர்களிடமிருந்து வியாபாரிகள் முட்டை கொள்முதல் செய்கின்றனர். இந்த முட்டை கொள்முதல் விலையானது தற்போது திருவிழா பண்டிகை காலங்களில் தேவையை கருத்தில் கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த மாதம் 1-ந் தேதி ரூ.4.10 -க்கு முட்டை கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

    இது படிப்படியாக உயர்ந்து நேற்று முன்தினம் கொள்முதல் விலை 510 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.முட்டை கொள்முதல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இது குறித்து தமிழ்நாடு முட்டை கோழி பண்ணையாளர்கள் துணைத் தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் கூறியதாவது:-

    தமிழகத்தில் முட்டை கொள்முதல் விலை 510 காசாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தாலும் நாமக்கல் முட்டை விற்பனையை நிர்ணய ஆலோசனை குழு 30 காசு குறைத்து விற்க பரிந்துரைக்கிறது. அதன்படி ஒரு முட்டையை 480 காசுக்கே வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். ஆனால் ஹைதராபாத் மண்டலத்தில் கொள்முதல் விலை 500 காசாக நிர்ணயம் செய்யப்பட்ட அதே விலைக்கு வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர்.

    இதனால் விலை குறைவாக உள்ள தமிழக முட்டைக்கு அதிக அளவில் ஆர்டர் வழங்குகின்றனர் .தினமும் 10 லோடு என 35 லட்சம் முட்டைகள் இங்கிருந்து மும்பை, கல்கத்தா போன்ற வட மாநிலங்களில் உள்ள முக்கிய பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. வட மாநிலங்களில் கொள்முதல் விலையை உயர்த்தும்போது தமிழகத்திலும் முட்டை விலை உயர்த்தப்படுகிறது. இனிவரும் நாட்களிலும் முட்டை விலை உயர வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உள்ளூர் மற்றும் வெளியூர் மக்களுக்கு சிறந்த முறையில் சிற்றுண்டி மற்றும் உணவு வகைகள் உண்ணக் கிடைக்கின்றன.
    • இச்சாலையோர கையேந்தி பவன்களில் விரும்பி உண்ணும் வாடிக்கையாளராகி உள்ளார்கள்

    திருவையாறு:

    திருவையாறு நகரின் மையப் பகுதியான தெற்கு வீதி மற்றும் பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ள ஓடத்துறைத் தெரு ஆகிய கடைத் தெருக்களில் ஏற்கனவே பாரம்பரியமாகவும் சமீப காலங்களில் தொடங்கி நடந்து. வருவதுமான டிபன் மற்றும் சாப்பாடு ஓட்டல்கள் நிறைய உள்ளன.

    இந்த ஓட்டல்கள் மூலம் உள்ளூர் மற்றும் வெளியூர் மக்களுக்கு சிறந்த முறையில் சிற்றுண்டி மற்றும் உணவு வகைகள் தாராளமாக உண்ணக் கிடைக்கின்றன. இந்நிலையில் சமீப காலமாக திருவையாறு நகரத்துக்கு வெளியே விளாங்குடி வழியாக அரியலூர், வடுகக்குடி வழியாக கல்லணை மற்றும் காருகுடி வழியாக.

    கும்பகோணம் ஆகிய நகரங்களுக்கு செல்லும் குடியிருப்பு ஏதும் இல்லாத சாலையோரங்களில் தோன்றியுள்ள டிபன் கடைகளில் விரும்பிச் சாப்பிடுபவர்களின் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது.

    சாலையில் செல்லும் மணல் லாரி டிரைவர் மற்றும் கிளீனர்களும், ஆட்டோ மற்றும் கார்களில் செல்லும் பயணிகளும் டிராபிக் இடையூறு இல்லாமல் வண்டிகளை ஓரமாக நிறுத்திவிட்டு விலை குறைவாகவும், சுவை மிகுதியாகவும் வீட்டுமுறைத் தயாரிப்பில் சுடச்சுடக் கிடைக்கும் எளிய வகை டிபன்களை சாலையோரக் கடைகளில் வாங்கிச் சாப்பிட்டுச் செல்கிறார்கள்.

    மேலும், அருகிலுள்ள கிராமங்களில் இருந்து பாதசாரியாக சாலையில் நடந்தும் சைக்கிளிலும் இருசக்கர வாகனங்களிலும் செல்பவர்கள் இச்சாலையோர கையேந்தி பவன்களில் விரும்பி உண்ணும் வாடிக்கையாளராகி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தக்காளி விலை குறைவால் போட்டி போட்டு வாங்கி செல்லும் பொதுமக்கள்.
    • ஆண்டுதோறும் விளைச்சல் இருந்தபோதும், ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் தக்காளி விளைச்சல் வழக்கத்தைக் காட்டிலும் 3 மடங்கு அதிகரித்து காணப்படும்.

    நாமக்கல்:

    தருமபுரி, பாலக்கோடு, கிருஷ்ணகிரி, ஓசூர், மணப்பாறை, கரூர், தொட்டியம், நாமக்கல், ராசிபுரம், சேலம், ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் விளைச்சல் இருந்தபோதும், ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் தக்காளி விளைச்சல் வழக்கத்தைக் காட்டிலும் 3 மடங்கு அதிகரித்து காணப்படும்.

    கடந்த சில மாதங்களுக்கு முன் விளைச்சல் சரிவால் ஒரு கிலோ தக்காளி ரூ.120 வரை விற்பனையானது. அதன்பிறகு படிப்படியாக சரிவடைந்தது. தற்போது அனைத்து பகுதிகளிலும் தக்காளி விளைச்சல் வழக்கத்தைக் காட்டிலும் வெகுவாக அதிகரித்துள்ளது.

    இதனால் விவசாயிகள் பழங்கள் அழுகி வீணாவதை தடுக்க குறைவான விலைக்கு கிலோ ரூ.5-க்கு மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்கின்றனர். அவற்றை சரக்கு வாகனங்களில் கொண்டு வரும் விவசாயிகள் கிலோ ரூ.10, 12 என்ற விலையில் மக்களிடம் விற்பனை செய்கின்றனர்.

    சாலையோரங்களிலும், வீதி, வீதியாக சென்றும் ஒரே நாளில் 600 கிலோ வரை தக்காளியை விற்கின்றனர். நாமக்கல் பகுதியில் வெளிமாவட்ட வியாபாரிகள் பலர் சரக்கு வாகனங்களில் தக்கா ளியுடன் முகாமிட்டுள்ளனர்.

    இது குறித்து வியாபாரி கள் கூறுகையில், தக்காளி விளைச்சல் வரும் அக்டோபர் மாதம் வரை அதிகரித்து காணப்படும். ஒரு செடியில் 10 பழங்கள் காய்த்தால், தற்போது 30 பழங்கள் வரை காய்க்கும் பருவமாகும். இதனால் விலை சரிவடைந்துள்ளது. விவசாயிகளிடம் மொத்த மாக கொள்முதல் செய்து பல்வேறு இடங்களுக்கும் சரக்கு வாகனங்களில் எடுத்துச் சென்று 4 கிலோ ரூ.50 என விற்பனை செய்து வருகிறோம் என்றனர்.

    • இறால், மீன்களுக்கு முறையான கட்டுப்படியான விலை கிடைக்கவும் மீனவர் வாழ்வாதாரத்தை காத்திடமும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • வரி இல்லா டீசல் வழங்கி மீனவர்களை காப்பாற்ற வேண்டும்.

    பேராவூரணி:

    தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர் சங்க ஆலோசனைக் கூட்டம் மல்லிப்பட்டினத்தில் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் ஏ. தாஜூத்தீன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், மீன்பிடி தடைக் காலத்தால் போதிய அளவு பலன் இல்லாமல் உள்ளது.

    தடைக்காலம் முடிந்து பிடித்து வரும் இறால், கணவாய், நண்டு போன்ற ஏற்றுமதி வகைகளை உரிய விலைக்கு விற்க முடியாதபடி, இங்குள்ள ஏற்றுமதியாளர்கள் சிண்டிகேட் அமைத்து குறைந்த விலைக்கு வாங்குவதால் மீனவர்கள் சிரமப்பட்டு வரு கின்றனர். எனவே, இறால், மீன்களுக்கு முறையான கட்டுப்படி யான விலை கிடைக்கவும், மீனவர் வாழ்வாதாரத்தை காத்திடமும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். டீசல் விலை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. எனவே விசைப்படகு தொழில் மிக வும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. ஆகவே, மானியத்தை கூடுதலாக்கி தர வேண்டும். வரி இல்லா டீசல் வழங்கி மீனவர்களை காப்பாற்ற வேண்டும்.

    தஞ்சை மாவட்ட விசைப்படகுகளை ஆய்வு செய்து, அருகாமையில் உள்ள நாகப்பட்டினம் மாவட்டம் போல் ஐந்து நாட்கள் வரை தங்கி மீன் பிடித்து வர அனுமதி வழங்க வேண்டும். இதனால் எரிபொருள் சிக்கனம் ஏற்படு வதுடன், மீனவர் வாழ்வாதாரம் உயரும். எனவே அமைச்சர் மற்றும் ஆணையர்கள் இதனை ஆய்வு செய்ய வேண்டும்" என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×